புதிய அரசியலமைப்பு தொடர்பான வரைவு அடுத்த மாதம் நாடாளுமன்றில்!

புதிய அரசியலமைப்புச் சட்டத்தை தயாரிக்கும் வரைவு தொடர்பான இடைக்கால அறிக்கையை எதிர்வரும் நவம்பர் மாதம் நாடாளுமன்றில் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக குழுவின் செயலாளரான நாடாளுமன்ற பிரதி செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.
இது குறித்த கருத்துக்களை முன்வைப்பதற்காக சட்டமா அதிபர் அரசியலமைப்பு நடவடிக்கை குழுவிற்கு சமூகமளித்ததாக வும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தல் முறைமை, அதிகாரத்தை பரவலாக்குதல் போன்ற விடயங்கள் குறித்து தற்போது விரிவாக கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.கடந்த 4 ஆம் திகதி அரசியலமைப்பு நடவடிக்கை குழு பிரதமர் தலைமையில் கூடியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Related posts:
மானிட சமூகத்தின் உயர்ந்த பண்பின் வெளிப்பாடு தைப்பொங்கல்-ஜனாதிபதி!
சிவனொளிபாத மலை யாத்திரைக்கான பாதை விரிவுபடுத்தல்!
சட்டத்திலுள்ள குறைபாடுகளால் சிறந்ததோர் சமூகத்தை கட்டியெழுப்ப முடியாதுள்ளது – ஜனாதிபதி!
|
|