புதிதாக 23 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமனம்!

வடமாகாணத்தில் கடமையாற்ற புதிதாக 23 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயினால் இன்று சனிக்கிழமை (05) காலை 8.30 மணியளவில், வடமாகாண ஆளுநர் செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன
வடமாகாண சபையின் கீழ் உள்ள பொது நிர்வாக சேவைகள் திணைக்களத்திற்குட்பட்ட வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிற்கும் 23 பேர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் 23 பேரும், எதிர்வரும் 5 வருடங்கள், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் வவுனியா உள்ளிட்ட திணைக்களங்களில் கடமையாற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
வைரஸ் காய்ச்சல்: இரு குழந்தைகள் உயிரிழப்பு!
ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 197 கைதிகள் இன்று விடுதலை!
மார்ச் மாதம் இலங்கை வருகிறார் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி – இரு நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் வலுப...
|
|