பிரதமரின் தலைமையில் கொழும்பில் நடைபெறும் பங்களாதேஷின் 51 ஆவது சுதந்திரதினக் கொண்டாட்டம்!
Monday, March 28th, 2022இலங்கையிலுள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பங்களாதேஷின் 51 ஆவது சுதந்திர மற்றும் தேசிய தின நிகழ்வுகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது.
இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரிக் மொஹமட் ஆரிபுல் இஸ்லாம் அவர்களின் அழைப்பின் பேரில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பிரதமரின் பாரியார் திருமதி. ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் இராஜதந்திர உறவுகளை நிறுவி 50 ஆண்டுகள் பூர்த்தியாவதோடு. அது இந்நிகழ்வுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் முகமாக அமையப்பெற்றிருந்தது.
இந்நிகழ்வில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபயவர்தன, அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, எஸ்.பி.திஸாநாயக்க, இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரிக் மொஹமட் ஆரிபுல் இஸ்லாம், இராஜாங்க அமைச்சரான தாரக பாலசூரிய, வெளிநாட்டு தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
000
Related posts:
|
|