பாற்பண்ணையாளர்களை வலுப்படுத்த நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்ஹ தெரிவிப்பு!.

உள்ளூர் பாலுற்பத்தியாளர்களை வலுப்படுத்துவதற்காக பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்ஹ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் எண்ணக்கருவான ‘சுபீட்சமான உற்பத்திக் கிராம’ வேலைத்திட்டத்தின் கீழ் பாலுற்பத்தியாளர்களை மேம்படுத்துவதற்காக திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வெளிநாட்டுப் பால்மாவிற்காகச் செலவிடப்படும் நிதியைக் குறைப்பதே இதன் நோக்கமாகும் எனவும் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்ஹ தெரிவித்துள்ளார்.
நொச்சியாகம, கட்டுபத்வெள பகுதியில் ‘சுபீட்சமான உற்பத்திக் கிராம’ வேலைத்திட்டத்தை ஆரம்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தொழிலாளர் சேவையை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கும் பஹ்ரெய்ன்!
துருக்கி ஜனாதிபதி எர்டோகனை சந்தித்தார் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன !
லிட்ரோ நிறுவனம் 1.5 பில்லியன் ரூபாய் இலாபத்தை திறைசேரிக்கு பெற்றுக்கொடுத்துள்ளது - லிட்ரோ நிறுவனத்தி...
|
|