பாதுகாப்பற்ற வாகனங்கள் இறக்குமதிக்கு தடை!

யூரோ போவினால் தடை செய்யப்பட்ட வாகனங்கள் உட்பட பாதுகாப்பற்ற வாகனங்களுக்கான இறக்குமதி இன்று முதல் தடை செய்யப்படுகிறது.
இதற்கமைய காற்று பலூன்கள் இருக்கை பட்டி மற்றும் புகை கக்கும் தன்மை போன்றவற்றில் பாதுகாப்பற்ற வாகனங்கள் எல்லாவற்றினதும் இறக்குமதிகள் தடைசெய்யப்படவுள்ளதாக நிதி அமைச்சுதெரிவித்துள்ளது.
மேலும் 2018 ஜனவரி முதல் இது நடைமுறைப்படுத்தப்பட இருந்தபோதும் துறைசார்ந்தோரின் கோரிக்கை காரணமாக இன்று வரை பிற்போடப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன்படி காற்று பலூன்கள் சாரதிக்கான த்ரீ பொன்ட் இருக்கை பட்டிகள், பயணிகளுக்கான இருக்கை பட்டிகள், மற்றும் ஏபிஎஸ் தடையாளி என்பவற்றை கொண்டிருக்காத வாகனங்களுக்கு இறக்குமதி தடைவிதிக்கப்படுகிறது.
Related posts:
வடமாகாண கல்வி அமைச்சின் வினைத்திறனின்மையால் ஒரு பாடசாலையில் இரண்டு அதிபர்கள் - ஈ.பி.டி.பி.யின் வடக்...
தீவகத்தில் நெற்செய்கையை பாதுகாப்பதற்கு முட்கம்பிகள் - விவசாயத் திணைக்களம் வழங்கியது!
ஏப்ரல் 21 தாக்குதல் - இந்தியாவுக்கு முன்பே இலங்கையை எச்சரித்த பாகிஸ்தான்!
|
|