பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்றுமுதல் ஆரம்பம் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கும் பணிகள் இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
முன்பதாக கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தற்போது நடைமுறையில் உள்ள நடமாட்ட கட்டுப்பாட்டுக் காலத்தில் மக்களுக்கு உதவித் தொகை ஒன்றை வழங்க ஏற்பாடுகளைச் செய்யுமாறு துறைசார் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச நேற்றையதினம் அறிவுறுத்தியிருந்தார்.
அதற்கமைய .நிரந்தர வருமானம் பெறும் அரச ஊழியர்கள் மற்றும் அதிக வருமானம் ஈட்டுகின்ற வர்க்கத்தினரை தவிர ஏனைய அனைத்து குடும்ப உறுப்பினர்கள். சமுர்த்தி பெறும் குடும்ப உறுப்பினர்கள். சமுர்த்திபெற தகுதி இருந்தும் இதுவரை சமுர்த்தி உணவு முத்திரை கிடைக்காது காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்கள். 70 வயதினைக் கடந்த மூத்தவர்கள். 70 வயது பூர்த்தியடைந்தும் இதுவரை மூத்தோர் கொடுப்பனவிற்கான முத்திரையினைப் பெறாது காத்திருப்புப் பட்டியலில் உள்ளவர்கள். மாற்றுத் திறனாளிகள். இதுவரை கொடுப்பனவினைப் பெறாது காத்திருப்பு பட்டியலில் உள்ள மாற்றுத்திறனாளிகள். PMA மஞ்சள் நிற அட்டை பெறுகின்றவர்களும் மற்றும் அதற்கு விண்ணப்பித்து காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களும். சிறுநீரக பாதிப்பு போன்ற பாரிய நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகியுருப்போர்கள் ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட இருக்கும் 5000 ரூபாய்கள் உதவித் தொகையினைப் பெற தகுதியுடையவர்களாக அறிவிக்கப்பட்டுள்தாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
அதேநேரம் ஒருவர் சமுர்த்தி பெறுகின்றவர் அல்லது சமுர்த்தி பெற தகுதியுடையவர், அத்துடன் அவர் மூத்தோர் கொடுப்பனவினைப் பெறுகின்றவர், அல்லது அதனை பெற தகுதியுடையவராயின் அவர் மேற்படி இரண்டு வகைக்குட்பட்ட கொடுப்பனவினைகளையும் பெறுவதற்கு தகுதி உடையவராவார் என்றும் சுட்டிக்காட்டியிருந்த ஜனாதிபதி இந்த உதவி தொகையினை பெற தகுதியுடையோர் எவர் என்ற முழுமையான தகவல்களை மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில், கிராம சேவகர்கள் ஊடாக மக்கள் பெற முடியும் என்றும் இந்த சேவையினை ஒருங்கிணைப்பதற்காக ஜனாதிபதி செயலகம் 24 மணி நேரமும் பொது மக்களுக்காகச் செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற என்றும் இந்த சேவைக்கு பொறுப்பான அதிகாரிகளை பிரதேச செயலக மட்டங்களில் தொடர்பு கொண்டு இந்த கொடுப்பனவினை மக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்றுமுதல் குறித்த கொடுப்பனவு வழங்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|