பாடசாலைகளில் எஸ்படொஸ் கூரைத்தகடு பயன்பாட்டை தடை – வர்த்தமானி அறிவிப்பு வெளியிடவுள்ளதாக சுற்றாடல்துறை அமைச்சர் அறிவிப்பு!

Thursday, July 1st, 2021

பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கு புதிதாக அமைக்கப்படும் கூரைகளுக்கு எஸ்படொஸ் கூரைத்தகடுகளைப் பயன்படுத்துவதை தடை செய்யும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படவுள்ளதாக சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன் எஸ்படொஸ் கூரைத்தகடுகளை தடை செய்யும் வேலைத்திட்டத்தை கிரமமாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கை அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கு புதிதாக அமைக்கப்படும் கூரைகளுக்கு எஸ்படொஸ் கூரைத்தகடுகளை பயன்படுத்துவதை தவிர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில், கல்வி அமைச்சு உள்ளிட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

உதிரிபாகங்களின் விலை சடுதியாக அதிகரிப்பு - பாடசாலை போக்குவரத்து சேவைக்கான கட்டணத்தை அதிகரிக்க தீர்மா...
இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று – நான்காவது தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு பொது சுகா...
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளுக்கு அமைய புதிய இறப்புச் சான்றிதழை அடுத்த வாரம்முதல் விநியோகிக்...