பழைய முறையில் மாகாண சபைகளுக்கான தேர்தல் – அமைச்சரவைப் பத்திரம் விரைவில்!

மாகாணசபைத் தேர்தலை பழைய முறையிலேயே நடத்துவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன்படி கடந்த ஆட்சியின்போது மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை இல்லாது செய்வதற்காக மாகாண சபைச் சட்டத்தில் திருத்தமொன்று மேற்கொள்ளப்படவுள்ளது. மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ஷ, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் இருவருக்குமிடையில் தொலைபேசி ஊடாக கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தடம் மாறியது யாழ்தேவி !
சி.ஐ.டியின் புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் பிரேமரத்ன நியமனம்!
இலங்கை நாணயத்தாள்களை சேதப்படுத்துவோருக்கு இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை!
|
|