பல்கலை அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

2018 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி பிரியந்த பிரேமகுமார தெரிவித்துள்ளார்.
விண்ணப்பங்களை ஒன்-லைன் முறையில் இணையத்தின் ஊடாக சமர்ப்பிக்க முடியும் எனவும், இதற்குரிய வழிகாட்டல்கள் அடங்கிய கையேட்டை இன்று முதல் முகவர் புத்தகக் கடைகளில் விலைக்கு வாங்கலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
அமைதியாக சமாதியை கடந்த பாதயாத்திரை!
போதையில் நிலைதடுமாறி விபத்தில் சிக்கிய பெண்கள் - யாழ்ப்பாணத்தில் சம்பவம்!
சீனா இலங்கையின் உண்மையான நண்பன் - உதவிகளை வழங்குவதற்கு எந்த அரசியல் நிபந்தனையையும் முன்வைத்ததில்லை –...
|
|