பல்கலைக்கு தகுதி பெறாத மாணவர்களுக்காக விசேட வேலைத்திட்டம்!
Thursday, May 6th, 2021பல்கலைக்கழக அனுமதிக்காக தகுதி பெறாத மாணவர்களுக்கு விசேட வேலைத்திட்டமொன்று அமுல்படுத்தவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது.
அவ்வாறான மாணவர்களின் தரவுகளை திறன் அபிவிருத்தி அமைச்சு கோரியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனியார் மற்றும் அரச துறைகளில் காணப்படும் பல்வேறு கற்கை நெறிகளில் இவர்களை ஈடுபடுத்துவதற்கான தரவுகள் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
அதற்கமைய, பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகாத மாணவர்களின் தரவுகளை திறன் அபிவிருத்தி அமைச்சுக்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வறட்சியினால் பாதிப்பில்லை - விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்!
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்தை தாண்டியுள்ளது - தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரிக...
இஸ்ரேல் - பாலஸ்தீன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு பிரிக்ஸ் அமைப்பினால் மாத்திரமே முடியும் - நாட...
|
|