பரீட்சையில் மோசடி செய்த மாணவர்கள் தொடர்பில் விசாரணை!

2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் மோசடி செய்த 969 மாணவர்கள் தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம்தெரிவித்துள்ளது.
பரீட்சை மோசடியில் 2194 மாணவர்கள் ஈடுபட்டதாகவும் இவர்களில் 969 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜிததெரிவித்துள்ளார்.
குறித்த மாணவர்கள் பரீட்சை நிலையத்திற்குள் மோசடியில் ஈடுபட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|