பயண சீட்டின்றி பயணித்த 40 பேர் கைது!

புகையிரதத்தில் பயண சீட்டின்றி பயணித்த 40 பேர் மருதானை புகையிரத நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு மணித்தியாலங்கள் வரை மேற்கொண்ட சுற்றிவளைப்பு ஒன்றின் போது, குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக புகையிரத பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்போது 30 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அபராத தொகையை செலுத்திவிட்டு சென்றதுடன் 10 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.குறித்து நபர்களிடம் இருந்து 90 ஆயிரம் ரூபா வரை அறவிடப்பட்டுள்ளதாக புகையிரத பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
Related posts:
நல்லூர் ஆலய பாதுகாப்பு கடமையிலிருந்த இரு பொலிஸார் மயக்கம்!
பேராதனை பொலிஸ் நிலையம் மீளமைக்க 14 கோடி ஒதுக்கீடு!
இன்று அரச விடுமுறை!
|
|