பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா!

பண்டிகை காலத்தை முன்னிட்டு பயணக் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படாது என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் கொழும்பில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்பவர்களுக்கு அன்டிஜென் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பண்டிகை காலங்களில் பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என்றும் சவேந்திர சில்வா கூறினார்.
அதன் பிரகாரம் தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தை மையமாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
Related posts:
கொள்கை தளராது தமிழ் மக்களின் விடிவுக்காக உழைத்துவரும் ஒரே தலைவர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே - வவுனியாவ...
ஒரு வார காலத்திற்கு சாதாரண வங்கி சேவையை இடைநிறுத்த தனியார் வங்கிகள் தீர்மானம்!
சர்வதேச விமான நிறுவனங்கள் சில இலங்கையுடன் புதிய விமான சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை - சுற்றுலாத்துற...
|
|