பயங்கரவாதத் தடை தற்காலிக ஏற்பாடுகள் திருத்த சட்டமூலம் நிறைவேறியது !

பயங்கரவாதத் தடை தற்காலிக ஏற்பாடுகள் திருத்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு திருத்தங்களுடன் நிறைவேறியது.
குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக 86 வாக்குகளும் எதிராக 35 வாக்குகளும் நாடாளுமன்றில் கிடைத்தன.
இதனை அடுத்து பயங்கரவாதத் தடை தற்காலிக ஏற்பாடுகள் திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 51 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்ததுடன் அச்சட்டம் குறித்து நாடாளுமன்றில் கடும் அதிருப்தியும் வெளியிட்டன.
இருப்பினும் குறித்த வாக்கெடுப்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பங்குபற்றவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
Related posts:
சாவகச்சேரி திருவள்ளுவர் சனசமூக நிலையத்திற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் தளபாடங்கள் வழங்கிவைப்பு!
பளை வைத்தியர் விவகாரம்: வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது - பொலிஸ் பேச்சாளர்!
தொற்றுநோய்க்குப் பிந்தைய உலகளாவிய சவால்களை எதிர்கொள்ள கொழும்புத் திட்டத்தை வலுப்படுத்துங்கள் - அபிவ...
|
|