பனை அபிவிருத்தி சபையால் 5 ஆயிரம் கிலோ வெல்லம் உற்பத்தி!

பனை அபிவிருத்தி சபை ஐயாயிரம் கிலோ வரையிலான பனை வெல்லத்தை உற்பத்தி செய்துள்ளது.
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற இடங்களில் உள்ள சபையின் உற்பத்தி நிலையங்களில் இந்த பனை வெல்ல உற்பத்திகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த உற்பத்தி நிலையங்கள் ஊடாக சுமார் நாற்பது ஆயிரம் கிலோ வரையிலான பனை வெல்லம் உற்பத்தி செய்யப்படவுள்ளது.
தற்போது முதற்கட்டமாக உற்பத்தி செய்யப்பட்ட பனை வெல்லம் சகல கற்பகம், விற்பனை நிலையங்கள் ஊடாகவும் நுகர்வோருக்கு விநியோகிக்கப்பட்டும் வருகின்றன.
உற்பத்தி செய்யப்படும் பனை, வெல்லங்களை வெளிநாடுகளுக்கு சந்தைப்படுத்தவும் சபை தயாராகி வருகின்றது.
Related posts:
பயங்கரவாத தாக்குதல் - 23 சிறுவர்கள் உயிரிழப்பு!
திருக்கார்த்திகை திருநாள் !
சுகாதார சேவையில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தினார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க!
|
|