பதிவு செய்யப்படாத மோ.சைக்கிளுக்கு 12,000 தண்டம்!

புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிளை ஓட்டிப்பார்த்தவர் சாவகச்சேரி நீதிமன்றில் 12 ஆயிரம் ரூபா தண்டம் செலுத்தினார். பதிவுசெய்யப்படாத மற்றும் காப்புறுதிப் பத்திரமின்றி மோட்டார் சைக்கிளை செலுத்திய நபருக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றில் கொடிகாமம் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிவான் இரு குற்றங்களுக்குமாக 12 ஆயிரம் ரூபா தண்டம் விதித்தார். இதேவேளை மதுபோதையில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்திய சாரதிக்கு 8 ஆயிரத்து 500 ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.
Related posts:
சம்பள அதிகரிப்பை ஊழியர்களுக்கு வழங்கத் தவறிய தனியார் துறையினர் மீது நடவடிக்கை!
கனகாம்பிகை குளத்தின் நீர்மட்டம் படிப்படியாக அதிகரிப்பு - குளத்தின் கீழ் பகுதியில் வசிக்கும் மக்களை ...
குவைத்தில், சட்டவிரோதமாக தொழில் புரிந்த 62 இலங்கையர்கள் நாட்டுக்கு மீண்டும் அழைத்துவரப்பட்டனர்!
|
|