படுதோல்வியுடன் நாடு திரும்பிய இலங்கை அணி – அச்சத்தில் விசேட வழியாக விமான நிலையத்தை விட்டு வெளியே வீரர்கள்’!

Wednesday, June 19th, 2024

ரி-ருவென்டி உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட  இலங்கை கிரிக்கெட் அணி இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இதன்போது  ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த  இலங்கை டி20 கிரிக்கெட் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க,

வீரர்கள் சரியாக விளையாடாததால் இந்த ரி-ருவென்டி உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து விலக நேரிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அணித் தலைவர் மற்றும் வீரர் என்ற ரீதியில் வருத்தமாக உள்ளதென ஹசரங்க தெரிவித்துள்ளார்.

“வீரர்களாகிய நாங்கள் என்ன தவறு செய்தோம் என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் சிறப்பாக விளையாடவில்லை, எனவே துடுப்பாட்டம், களத்தடுப்பு மற்றும் பந்துவீச்சு ஆகியவற்றில் நாங்கள் ஒரு அணியாக சிறப்பாக செயல்படவில்லை,” என அவர் கூறினார்

இதேவேளை, பொதுவாக சாதாரண பயணிகள் முனையம் வழியாக வெளியேறுவது வழமை. எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக பணம் செலுத்தி வசதி செய்ய வேண்டிய “சில்க் ரூட்” எனப்படும் முனையம் வழியாக விமான நிலையத்தை விட்டு வெளியே வர ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

இறக்குமதி பொருட்கள் சிலவற்றை மட்டுப்படுத்த தீர்மானம் - இறக்குமதி கட்டுப்பாட்டு ஆணையாளர் தெரிவிப்பு!
தமிழர் உரிமைக்கான போராட்டத்தில் காவியமான முதலாவது பெண் போராளியும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சகோத...
பொருளாதார கட்டுப்பாடுகளின் பாதகமான விளைவுகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் ...