நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டத்தில் திருத்தம் – இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவிப்பு!

நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனூடாக வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை அதிகரிக்கப்படும் என சந்தைப்படுத்தல் கூட்டுறவு சேவைகள், சந்தை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
இதற்கான அமைச்சரவை அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கைகளை இரண்டு வாரங்களில் மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதுவரை 5,000 முதல் 25,000 ரூபாவிற்குள்ளேயே அபராதம் விதிக்கப்படுவதால், வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் எவ்வித அச்சமுமின்றி தவறிழைப்பதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நுகர்வோரின் நலன் கருதியே இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
படைப்புழுவின் தாக்கம் அதிகரித்துள்ளது : நெற் செய்கையையும் இது பாதிக்கலாம்!
அபாய நிலையிலிருந்து இன்னமும் யாழ் மாவட்டம் விடுபடவில்லை - அரச அதிபர் மகேசன் எச்சரிக்கை!
கம்பஹாவில் தொடர்ந்தும் முடக்கநிலை: அரச மற்றும் தனியார் வங்கிகி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை திறக்க அ...
|
|