நீடிக்கப்பட்ட நிதிவசதி திட்டத்தின் 2 ஆம் மதிப்பாய்வு தொடர்பில் எதிர்வரும் 12 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையில் ஆராயப்படும்!

சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் சந்திப்பு நிகழ்ச்சி நிரலின் கீழ் இலங்கைக்கான நான்காவது ஆலோசனையும் இரண்டாவது மீளாய்வும் ஜூன் 12 ஆம் திகதி நடைபெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த அமர்வில் இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்த முன்னேற்றம் குறித்து மதிப்பீடு செய்யப்படும் என அமைச்சர் தனது X கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பொருளாதார ஸ்திரத்தன்மை, வளர்ச்சி மற்றும் சீர்திருத்த முயற்சிகளை மேலும் மேம்படுத்தும் மூன்றாவது தவணையை வெளியிடுவதற்கான வெற்றிகரமான மீளாய்வுக்கு அனைத்து நாடுகளின் தொடர்ச்சியான ஆதரவை இலங்கை எதிர்பார்க்கிறது என்றும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.நிறைவேற்றுச் சபை கூட்டத்தில் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆராயப்படவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை கூட்டம் சீசெல்ஸில் இன்று (03) ஆரம்பமாகின்றது.
இந்தநிலையில் இலங்கை தொடர்பான மதிப்பாய்வின் பின்னர் இலங்கைக்கு மேலும் 330 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப் பெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க நம்பிக்கை வெளியிட்டுளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|