நில அதிர்வுகளை கண்காணிக்கும் 5 ஆவது மையத்தை மேல்மாகாணத்தில் ஸ்தாபிக்க நடவடிக்கை – சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவிப்பு!

இலங்கையில் நில அதிர்வுகளை கண்காணிக்கும் 5 ஆவது மையத்தை மேல் மாகாணத்தில் ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாட்டை அண்மித்த சில பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டன. லுணகம்வேஹர பகுதியில் நில அதிர்வுகள் உணரப்பட்டதால் நாட்டில் மேலும் நில அதிர்வுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும், அவ்வாறான எந்த தகவல்களையும் நிபுணர் குழு தமக்கு அறிவிக்கவில்லை. இதனால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்ப்பாணத்தில் கேபிள் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் பணம் கொடுத்த மக்கள் அவலத்தில்!
இந்தியாவுடன் இணைந்து செயற்படுவோம் - இராணுவத் தளபதி!
ஊடக நிறுவனங்களுக்கான வழிகாட்டல் சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும் - தேர்தல் ஆணைக்குழு!
|
|