நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

கந்தகாடு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக்கூடிய சூழ்நிலை காணப்படுவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கந்தகாடுவின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மேலும் கூறியுள்ளதாவது,
“கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திலுள்ள கைதிகளைப் பார்வையிடவென, 116 பேர் இதுவரை வருகை தந்திருந்தனர். குறித்த அனைவரும் வெவ்வேறு பகுதிகளில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் குறித்த அனைவரும் பயணித்துள்ள இடங்கள் அனைத்தும், இந்த வாரத்திற்குள்ளேயே அடையாளம் கண்டுகொள்ள முடியும்.
ஆகவே கந்தகாடு நிலைமையை விரைவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
தனி சிகரெட் விற்பனைக்கு முற்றுப்புள்ளி - அமைச்சரவை பத்திரம் இன்று கைச்சாத்து!
இன்றுமுதல் அனைத்து அமைச்சுகள் மற்றும் அரசு நிறுவனங்களின் பணிகள் ஆரம்பம் – அரசாங்கம்!
நெருக்கடியினை கருத்திற்கொண்டு யாழ்ப்பாணம் - கொழும்பு விசேட புகையிரத சேவை ஒன்று முன்னெடுப்பு!
|
|