நிலநடுக்கத்தினால் இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை -வெளிவிவகார அமைச்சு!

நியூசிலாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என்று வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை நியூசிலாந்தில் நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தவர்களுக்கு இலங்கை அரசாங்கம் அனுதாபம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தினால் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்திப்பதாக வெளிவிவகார அமைச்சு அதன் ட்;விட்டர் தள செய்தில் குறிப்பிட்டுள்ளதுஇது குறித்து வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மஹேஸினி கொலன்னே தகவல் தருகையில் பூகம்பத்தினால் இடம்பெயர்ந்தவர்கள் தொடர்பிலும் அரசாங்கம் தனது கவலையை தெரிவித்துள்ளது என்றார்.
Related posts:
கட்சி மாறினால் பதவி பறிபோகும் - புதிய யோசனை!
ஐரோப்பிய பாராளுமன்ற தூதுக்குழு அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம்!
மக்களுக்கான சேவையை நான் இதயசுத்தியுடன் செய்திருக்கிறேன் - முன்னாள் மாகாணசபை உறுப்பினர் தவநாதன்!
|
|