நிர்ணய விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்யப்பட்டால் இறக்குமதி செய்யப்படும் – வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ எச்சரிக்கை!

Thursday, October 26th, 2023

நிர்ணய விலைக்கு அதிகமாக அரிசி விற்பனை செய்யப்படும் பட்சத்தில், அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று அமைச்சரவை உபகுழு கூடிய போது, இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

சம்பா உள்ளிட்ட பல அரிசி வகைகள் இவ்வாறு நிர்ணய விலைக்கு அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

சம்பா அரிசி 230 ரூபாவிற்கும் நாட்டரிசி 220 ரூபாவிற்கும் கீரி சம்பா 260 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட வேண்டுமென நிர்ணய விலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கண்டறியும் நோக்கில் இன்று முதல் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 1,800 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேக்கம் - இறக்குமதியாளர்கள் சங்கம் தெ...
ஜனாதிபதி கோட்டாபய ஆட்சியை பொறுப்பேற்ற பின் கண்ணீர் புகை, தடியடி தாக்குதல் இடம்பெற்றதாக வரலாறு இல்லை ...
வலி வடக்கு மக்களின் முகாம் வாழ்விற்கு முற்றுப்புள்ளி - காணிகள் பகிர்ந்தளிப்பு - அமைச்சர் டக்ளஸ் நடவட...