நிரூபித்து காட்டினால், எந்த நேரத்திலும் பதவி விலக தயார் – சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவிப்பு!

நாட்டில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள வைத்தியர்களுக்கு எவ்வித அநீதியும் இழைக்கப்படவில்லை என சுகாதார அமைச்சர் கலாநிதி கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சர் – வைத்தியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில், பதவி உயர்வுகள் உள்ளிட்ட விவகாரங்களில் அரசியல் தலையீடுகள் இல்லை எனவும் கூறியுள்ளார்.
மேலும், தாம் சம்பந்தப்பட்டுள்ளதாக யாரேனும் கூறினால், அதனை நிரூபித்து காட்டினால், எந்த நேரத்திலும் பதவி விலக தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காலியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாடுமுழுவதும் இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு உத்தரவு - ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவிப்பு!
வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக செப்டெம்பர் 06 மற்றும் 27ஆம் திகதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன - நாடாளுமன்...
தரம் ஐந்திற்கான புலமைப் பரிசில் பரீட்சை நாளை – வடக்கில் 18 ஆயிரத்து 759 மாணவர்கள் தோற்றுவதாக மாகாண க...
|
|