நிரூபம் சென் காலமானார்.

இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் நிரூபம் சென் நேற்று முன்தினம் புதுடில்லியில் காலமானார். இறக்கும் போது 70 வயது.
நிரூபம் சென் 2002 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக பணியாற்றினார்.; இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகராகவும் பதவிவகித்தவர்.1969 ஆம் ஆண்டு முதல் இந்திய இராஜதந்திர சேவையில் இணைந்து பணியாற்றிய அவர் பல்வேறு உயர் பதவிகளையும் வகித்திருந்தார். இலங்கையில் உயர்ஸ்தானிகராக கடமையாற்றுவதற்கு முன்னர் பல்கேரியா மற்றும் நோர்வே ஆகிய நாடுகளிலும் இந்திய உயர்ஸ்தானிகராகவும் கடமையாற்றினார்.
நிரூபம் சென் ஐக்கிய நாடுகளுக்கான இந்திய வதிவிட பிரதிநிதியாகவும் ஐக்கிய நாடுகளின் வருடாந்த அமர்வில் அவைத் தலைவரின் விசேட சிரேஷ்ட ஆலோசகராகவும் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
இத்தாலி நாட்டு சாரதி அனுமதிப்பத்திர கால எல்லை நிறைவு!
இம்மாதம் நடுப்பகுதியில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைப்பதற்கான நேர்முகப் பரீட்சை!
இலங்கையின் சுற்றுலா வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு ஈரான் அர்பணிப்புடன் செயற்படும் - ஈரான் வெளிவிவகார ...
|
|
புதிய முதலீடுகளினால் மாத்திரமே அந்நியச் செலாவணி கையிருப்பு பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் - கைத்தொழில...
நாட்டின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கு அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் - வளிமண்டலவியல் திணைக்களம் ...
ஐந்து தூதரக அதிகாரிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் வெளிவிவகார அமைச்சசின் கோரிக்கை ஜனாதிபதியால் நிர...