நியமிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படவுள்ளதென தகவல் வெளியாகியுள்ளது.
சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு அதிகாரம் வழங்குதல் மற்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்களைக் குறைத்தல் போன்ற விடயங்கள் உள்ளடக்கிய அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள 21 ஆவது அரசியலமைப்பு திருத்தம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
ஏற்கனவே, பல கட்சிகள், சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் 21 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.
21 ஆவது திருத்தச் சட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்துமாறு பல எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கடந்த நாட்களில் ஊடக சந்திப்புகள் நடத்தி கூறியுள்ளனர். அத்துடன், 21 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டால் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுவதற்கும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிப்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|