நிமோனியா நோய் தொடர்பில் ஆரம்பத்தில் இனங்கண்டால் குணப்படுத்த முடியும் – அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர்!

கொவிட் தொற்றுக்கு தாக்கம் செலுத்தும் நிமோனியா நோய் நிலைமையை ஆரம்பத்தில் இனங்கண்டால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்காமல் சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும் என அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
ஆரம்ப நாட்களில் சிகிச்சை பெறாமல் நோய் தீவிரமடைந்ததன் பின்னர் சிகிச்சைக்கு செல்வதையும் விட நோய் அறிகுறிகள் தென்படும் ஆரம்ப கட்டத்திலேயே தேவையான சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதன் மூலம் ஆபத்தான கட்டத்தைக் கடக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
Related posts:
பல்கலை கல்வி சாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!
வாக்குச்சீட்டுகளை அரச நிறுவனங்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை - தபால் திணைக்களம்!
இந்தியாவை ஆட்டம்காணச் செய்கிறது கொரோனா: ஒரே நாளில் 2000 பேர் பலி!
|
|