நாளொன்றுக்கு வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிப்பு – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தகவல்!

நாளொன்றுக்கு வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
சராசரியாக ஒரு நாள் சேவையின் கீழ் சுமார் 800 கடவுச்சீட்டுகள் முன்னர் வழங்கப்பட்டதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், ஒரு நாள் சேவையின் கீழ், வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை தற்போது மூவாயிரத்திலிருந்து 3 ஆயிரத்து 500 ஆக அதிகரித்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், வழமையான முறையின் கீழ் ஒரு நாளைக்கு 600 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டதாகவும், தற்போது அந்த எண்ணிக்கை ஆயிரத்து 200 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தொலைபேசிக் கட்டணங்களுக்கான வரி நீக்கப்படும்!
அச்சுவேலியில் ஒரேநாளில் 10 பேர் கைது!
உலக சாதனையாளர் உள்ளிட்ட வீரர்கள் நாட்டை வந்தடைந்தனர் – விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பு!
|
|