நாளை பிற்பகலுக்கு பின்னர் தபால் மூல வாக்கு பெறுபேறுகள் வெளியாகும் – தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு!

நாடாளுமன்ற தேர்தலில் தபால் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகளை எண்ணும் பணி 66 மத்திய நிலையங்களில் நாளை காலை 7.00 மணிக்கும் 8.00 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது
தபால் மூல வாக்களிப்பின் தொகுதி மட்டத்திலான முதலாவது உத்தியோகபூர்வ பெறுபேற்றை நாளை நண்பகல் 12.00 மணிக்கு பின்னர் வெளியிடக்கூடியதாக இருக்கும் என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இறுதி தேர்தல் பெறுபேறுகள் நாளை நள்ளிரவிற்கு முன்னர் வழங்கக்கூடியதாக இருக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
விருப்பு வாக்கு பெறுபேறுகள் வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு முன்னர் முழுமையாக வெளியிடக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
இரவு 8 மணிக்குள் தேர்தல் முடிவுகள் - தேர்தல்கள் திணைக்களம்!
கடைகளில் விற்பனையாகும் மருந்துகளை நம்பி ஏமாற்றமடைய வேண்டாம் - கொரோனா தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்...
நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 584 பேருக்குக் கொரோனா தொற்று – 1325 மரணங்களும் பதிவு – சுகாதார அமைச்சு தக...
|
|