நாளைமுதல் வானிலையில் மாற்றம்!

நாட்டில் காணப்படும் வரட்சியான வானிலையில் நாளையிலிருந்து சிறிய மாற்றம் எதிர்பார்க்கப்படுகின்றது.
கிழக்கு மாகாணக் கரையோரப் பகுதிகளில் குறிப்பாக காலை வேளையில் பெய்யக் கூடிய சிறிதளவான மழை வீழ்ச்சியைத் தவிர நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை மற்றும் ஓரளவு குளிரான வானிலையும் எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் சில பிரதேசங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் எனவும் காற்றானது வடக்கு முதல் வடகிழக்கு வரையான திசைகளில் இருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
Related posts:
ஆரம்பமானது கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரை!
இலங்கைக்கு வந்த உலகின் மிகப்பெரிய கப்பல்!
சொந்த மக்களுக்கு என்ன செய்தது கூட்டமைப்பு? - அந்தக்கட்சி மாகாணசபை உறுப்பினர் சிவயோகம் கேள்வி!
|
|