நாட்டில் 20 பேருக்கு ஒரு முச்சக்கர வண்டி!

இலங்கையில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் இதுவரை 63 இலட்ச வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 33 இலட்சம் முச்சக்கர வண்டிகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி 20 பேருக்கு ஒருவர் என்ற ரீதியில் முச்சக்கர வண்டியை வைத்திருப்பதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் வைத்தியர் சிசிர கோத்தாகொட தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.மேலும் கடந்த ஆண்டை பார்க்கிலும், இந்த வருடத்தின் கடந்த மாதங்களில் வீதி விபத்துக்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 106ஆக குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வீதி விபத்துக்களால் ஏற்படும் உயிர் ஆபத்தக்களை குறைக்கும் நோக்கில் சர்வதேச அளவில் ஐக்கிய நாடுகளின் உலக அமைப்பு 2010 தொடக்கம் 2020ஆம் ஆண்டுகளை வீதி விபத்துக்களை குறைக்கும் ஆண்டாக பெயரிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|