நாடு திரும்பும் ஈழ அகதிகளுக்கு இலவச விமான பயணச் சீட்டுக்கள்!

தமிழகத்திலிருந்து 76 ஈழ அகதிகள் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று குழுக்களாக எதிர்வரும் 29 ஆம் திகதி அவர்கள் தாயகம் திரும்பவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
திருச்சியிலிருந்து 41 பேரும், சென்னையிலிருந்து 35 பேரும் நாடு திரும்பவுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே தமிழகத்திலிருந்து வருகை தரவுள்ளனர்.
நாடு திரும்பும் ஈழ அகதிகளுக்கான இலவச விமான பயணச் சீட்டுக்கள் ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயத்தினால் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கை விட்டு வெளியில் செல்ல முடியாது: நிபந்தனையுடன் தயா மாஸ்டருக்கு பிணை.!
ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் இனவாத அரசியல் தேவையில்லை - அமைச்சர் விமல் வீரவங்ச வலியுறுத்து!
இலங்கையில் அடுத்த 18 மாதங்களுக்குள் கேபிள் கார் சேவை - நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெ...
|
|