நாடளாவிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள்!

Sunday, May 22nd, 2022

நாடு முழுவதும் பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றை சட்டவிரோதமாக, பதுக்கி வைத்து விற்பனை செய்வோரை கண்டறிவதற்கான விசேட சுற்றிவளைப்புக்கள் இன்றுமுதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றை பெற்று அதனை பதுக்கி வைப்பதால் செயற்கை தட்டுப்பாடு ஏற்படுகின்றது.

இதனால் பொது மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பெற்றோல் மற்றும் டீசல் இன்றி வீடு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

இவ்வாறு பதுக்கி வைக்கப்படும் எரிபொருள் தொகை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்த செயற்பாட்டை தடுக்கும் வகையில் விசேட சுற்றிவளைப்புகள் இன்றுமுதல் ஆரம்பிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: