நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு பக்தர்கள் பிரவேசிப்பது தடை !

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு பக்தர்கள் பிரவேசிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
சுகாதார அதிகாரிகளின் பணிப்புரைக்கு அமைய ஆலய வளாத்தினுள் ஆலய அறங்காவலர்கள் குருமார்கள் மற்றும் ஆலய பணியாளர்கள் தவிர்ந்த ஏனையோர் பிரவேசிக்க தற்காலிகமாக அனுமதிக்கப்படவில்லை என ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
அத்துடன் ஆலயத்தில் இடம்பெற்று வந்த அபிஷேகங்கள் மற்றும் தினசரி அன்னதானம் என்பவையும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைக்க ஈழமக்கள் ஜனநாயக கட்சி நடவடிக்கை!
நிவர் சூறாவளியின் தாக்கத்தை எதிர்கொள்ள தயாரானது தமிழகம் - யாழ் மாவட்டத்தில் 55 குடும்பங்கள் பாதிப...
யோகட் - சீஸ் - திராட்சை - ஆப்பிள் மோட்டார் சைக்கிள்கள் - முச்சக்கர வண்டிகள் - குளிரூட்டிகளுக்கான வரி...
|
|