நடைமுறைகளைக் கடைப்பிடிக்காத தேங்காய் எண்ணெய் தயாரிப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை – அதிகார சபை!

ஜனவரி மாதம் முதல் சந்தைக்கு விநியோகிக்கப்படும் அனைத்து தேங்காய் எண்ணெய் வகைகளையும், விற்பனைக்கு ஏற்ற வகையில் சந்தையில் விநியோகிக்க வேண்டுமென தெங்கு அபிவிருத்தி அதிகார சபை, அனைத்து தேங்காய் எண்ணெய் தயாரிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
விற்பனை செய்யப்படும் தேங்காய் எண்ணெய் போத்தல் மற்றும் ஏனைய பொதிகள், எண்ணெயின் வகை, தயாரிப்பு, காலவதியாகும் தினம், சில்லறை விலை, எடை, தயாரிப்பாளரின் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்களை தெளிவாக குறிப்பிடப்பட வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்காத தேங்காய் எண்ணெய் தயாரிப்பாளர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகார சபை தெரிவித்துள்ளது.
Related posts:
பேருந்து கட்டணங்களை இன்று முதல் அதிகரிக்க கோரிக்கை!
கட்சியின் மக்களுக்கான பணிகள் அரசியல் மயப்படுத்தப்பட வேண்டும் - ஈ.பி.டி.பியின் ஊடகச் செயலாளர் ஸ்ராலின...
அனைத்துக் கட்சித் தலைவர்களது கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நாளை!
|
|