தொழிலாளர்களுக்கு பாதிப்பாக உள்ள சட்டங்கள் பலவற்றில் திருத்தம் – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

தொழிலாளர்களுக்கு நீண்டகாலமாக பாதிப்பாக உள்ள சட்டங்கள் பலவற்றில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
தொழில் திணைக்களத்தில் இடம்பெற்ற அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்..
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –
நாட்டில் தொழில்புரியும் பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பல தடைகள் காணப்படுகின்றன. அவற்றை நீக்குவதற்காக வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்ட அமைச்சர் அதனடிப்படையில் தொழிலாளர்களுக்கு நீண்டகாலமாக பாதிப்பாக உள்ள சட்டங்கள் பலவற்றில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மூத்த போராளி சந்திரமோகன் காலமானார்!
நுளம்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கை - யாழ் மாநகர பிரதேசத்தில் 2 ஆயிரத்து 447 வீடுகள் சோதனை!
கொரோனா தொற்றினால் இதுவரை 12 சிறுவர்கள் மரணம்!
|
|