தொலைபேசி உரையாடல்கள் இணையத்தளங்களில் – மக்களுக்கு எச்சரிக்கை!

Thursday, January 9th, 2020

சமகாலத்தில் பல்வேறு நபர்களின் தனிப்பட்ட தொலைபேசி உரையாடல் சமூக வலைத்தளங்கள் ஊடாக வேகமாக பரவி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மக்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாத்துக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இலங்கை தகவல் தொழில்நுட்ப பிரிவு தெரிவித்துள்ளது.

தங்களின் தனிப்பட்ட தரவுகளை பாதுகாப்பதற்கு கடவுச்சீட்டு போன்ற பாதுகாப்பு முறை ஒன்றை குறைந்தபட்சம் பயன்படுத்துமாறு இலங்கையர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தங்களின் தனிப்பட்ட தரவுகளை சேமித்து வைக்கும் External Hard Disk,Pen Drive,Dvd Disc போன்றவற்றை தங்களிடமே வைத்துக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தள கணக்குகளின் கடவுச்சொற்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என இலங்கை தகவல் தொழில்நுட்ப பிரிவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: