தொலைக்காட்சி, வானொலிகளுக்கு புதிய நடைமுறை – அமைச்சர் பந்துல குணவர்தன!

இலங்கை தொலைக்காட்சி சேவைகளில் ஒளிபரப்பாகும் பாடல்களுக்கு தலா 100 ரூபாய் அறவிட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதற்கு தொலைக்காட்சி சேவைகள் இணக்கம் வெளியிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை வானொலிகளில ஒலிபரப்பாகும் பாடல்களுக்கு தலா 20 ரூபாய் செலுத்துவதற்கு அனைத்து வானொலி சேவைகளும் இணக்கம் வெளியிட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதிமுதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாடல்களுக்காக வசூலிக்கப்படும் பணம், இசையமைப்பாளர், பாடகர்கள், பாடலாசிரியர்களுக்கு பங்கிட்டு கொடுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
இடது பக்கத்தால் முந்திச் செல்வதற்கான தண்டப்பணத்தை மாற்ற அரசு இணக்கம்!
அடிப்படை வசதிகளுக்காக எதிர்பார்த்திருக்கும் குடும்பங்களினது எதிர்பார்ப்புக்களுக்கு முடியுமானவரை தீர்...
வீதி விபத்துக்களை மற்றும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை - எச்சரிக்கையுடன் செயற்படுமா...
|
|