தொண்டமானாறு கடல் நீரேரி பகுதியில் சடலம் கண்டெடுப்பு!

யாழ்ப்பாணம்- தொண்டமானாறு கடல் நீரேரி பகுதியில் சடலமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு அருகிலுள்ள தொண்டமானாறு நீரேரியில், சடலம் ஒன்று மிதப்பதாக அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் முதியவர் எனவும் அவர் தொடர்பிலான தகவல்களை அறிய மேலதிக விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பண்டத்தரிப்பு பகுதியில் குப்பைக்கு வைத்த தீயால் பற்றி எரிந்தது வீடு !
கல்வியில் ஏற்படும் புரட்சியிலேயே நாடும் வளர்ச்சி பெறும் - கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்!
கொரோனா: அமெரிக்காவில் 93,000 பேர் உயிரிழக்கலாம் – எச்சரிக்கும் நியூயார்க் ஆளுநர்!
|
|