தொடரும் வரட்சி : வடக்கு – கிழக்கு அதிக பாதிப்பு!

நாட்டின் 19 மாவட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள வறட்சி காரணமாக 12 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகமானோர் வடக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அங்கு ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 284 குடும்பங்களைச் சேர்ந்த 4 லட்சத்து 49 ஆயிரத்து 994 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனுடன் கிழக்கு மாகாணத்தில் 72 ஆயிரத்து 989 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 63 ஆயிரத்து 527 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது
Related posts:
யாழிலிருந்து இந்தியப் பிரதமருக்கு இந்து அமைப்புக்கள் கடிதம்!
கொரோனா தொற்றினால் நேற்றும் மூவர் உயிரிழப்பு !
வடக்கு மாகாணத்தில் பாடசாலை இடைவிலகல் சடுதியாக அதிகரிப்பு - மாகாண கல்வித் திணைக்கள புள்ளிவிபரங்கள் சு...
|
|