தொடருந்து சேவை பாதிப்பு!

தொடருந்து நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களுக்கு இடையிலான முரண்பாடு காரணமாக, நாடு முழுவதும் தொடருந்து மூலமான பொதி பரிமாற்று சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
பொதிப்பரிமாற்றல் நடவடிக்கையின் போது நடைமுறையில் உள்ள முறைமைகளுக்கு மாறாக தொடருந்து நிலைய அதிபர்கள் செயற்பட்டமையால், இந்த நிலைமை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
2 வருடங்களாக நிலவிய இந்த முரண்பாடு தற்போது தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பில் இன்று முற்பகல் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றிருந்த போதும் தீர்வு கிடைக்கவில்லை.
குறித்த பிரச்சினை காரணமாக நாடு முழுவதும் சுமார் 4000 ஆயிரத்துக்கும் அதிகமான பொதிகள் தொடருந்து நிலையங்களில் தேங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
Related posts:
நுகர்வோர் அதிகாரசபை தொழிற்சங்க நடவடிக்கையில்!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் வேலணையில் காப்பெற் வீதிகளாகப் புனரமைக்கப்படும் வீதிகள்!
வீதி ஒழுங்கு சட்டம் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படும் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!
|
|