தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தியோகபூர்வ அறிவிப்பு!
Wednesday, March 4th, 2020ஸ்ரீலங்கா சுதந்திர பொதுன கூட்டணி, எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கீழ் மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தியோகபூர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அதன் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் சட்டத்திற்கு அமைய, பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு 7 நாட்களுக்குள் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியானது, தேர்தலில் போட்டியிடுவதனை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தியோகபூர்வதாக அறிவிக்க வேண்டும்.
இதற்கமைய, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளரான சட்டத்தரணி சாகர காரியவசத்தினால் குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.
Related posts:
கடந்த வருடத்தில் விபத்துக்களில் சிக்கி 2960 பேர் உயிரிழப்பு!
ஜி.எஸ்.பி ப்ளஸ் சலுகையை வழங்குவது குறித்து ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் நீதியமைச்சர் கலந்துரையாட...
13 ஆம் திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் - ஐ.தே.க. உறுப்ப...
|
|