தேசிய அடையாள அட்டை இலக்க நடைமுறை கடுமையான முறையில் அமுல்படுத்தப்படும் – பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவிப்பு!

தேசிய அடையாள அட்டை இலக்க முறை எதிர்வரும் 17 ஆம் திகதிமுதல் கடுமையான முறையில் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த நடைமுறைக்கு மாறாக வீடுகளிலிருந்து வெளியே செல்பவர்களை கைதுசெய்து, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் பொதுமக்கள் தேசிய அடையாள அட்டை இலக்க முறைமைக்கு அமைய, வீடுகளிலிருந்து வெளியேறவேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர் அதற்கமைய தமது அன்றாட செயற்பாடுகளை திட்டமிட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
கடந்த 10 தினங்களில் 12 பேர் வெட்டிக்கொலை!
வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு மீண்டும் புள்ளிகள் வழங்கும் முறை அறிமுகம் - போக்குவரத்து அமைச்சு...
இரு தரப்பும் நன்மையடையும் வகையில், திருகோணமலை எரிபொருள் தாங்கிகளை அபிவிருத்தி செய்ய இந்தியா தயாராகவு...
|
|