தேசிய அடையாள அட்டைக்கான ஒரு நாள் சேவை இரத்து!

தொழிநுட்ப கோளாறு காரணமாக ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்படும் ஒருநாள் சேவை இன்று இடம்பெறாது என ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த திணைக்களத்தின் ஆணையாளர் ஜெனரல் வியானி குணதிலக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
கணினி பிரிவில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாகவே இன்றைய தினம் ஒரு நாள் சேவையை வழங்கமுடியாதுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய அடையாள அட்டைக்கான ஒரு நாள் சேவையை வழமைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
Related posts:
கோத்தபாய ராஜபக்சவே நிச்சியம் வெற்றி பெறுவார் - பிரபல ஜோதிடர் ஆரூடம்!
கொரோனா தொற்று இன்னும் உச்ச நிலையை தொடவில்லை : உயிர்ப்பலிகள் வேகம் அதிகரிக்கும் - உலக சுகாதார நிறுவ...
துறைமுக அதிகார சபையிடமிருந்து லங்கா சதொச பெற்ற இரு கொள்கலன் வெள்ளைப்பூண்டுகள் மூன்றாம் தரப்பினருக்க...
|
|