தெரிவுக்குழுவின் அறிக்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை – முன்னாள் ஜனாதிபதி சாட்சியம்!

Sunday, October 25th, 2020

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆறாவது நாளாக சாட்சியமளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி ஷமில் பெரேரா, முன்னாள் ஜனாதிபதியிடம் இரண்டாவது நாளாகவும் குறுக்குக் விசாரணைகளை முன்னெடத்திருந்தார்.

அவரின் கேள்விகளுக்கு முன்னாள் ஜனாதிபதி பதிலளிக்கையில் –

நான் நாடாளுமன்றத்தின் அந்த தெரிவுக்குழுவை ஏற்றுக்கொள்ளவில்லை. கேள்வி கேட்டவர் என்னுடன் பாரிய குரோதத்துடன் இருந்தவர். அங்கு செயற்பட்டவர்கள் என்னுடன் குரோதத்துடன் இருந்தனர்.

ஆகவே, நாடாளுமன்றத்தின் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சாட்சியமளித்தார்.

இதேவேளை, ஏதேனும் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என கிடைத்த புலனாய்வுத் தகவல்கள் தொடர்பில் 2019 ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து ஏப்ரல் 21 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளருக்கும் மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையிலான தொலைபேசி உரையாடல்களில் அறிவுறுத்தப்பட்டதா என இதன்போது வினவப்பட்டது. இதனை முன்னாள் ஜனாதிபதி நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: