துறைமுக நகர நிர்மாண பணிகளில் சிங்கப்பூர் நிறுவனம்?

கொழும்பு துறைமுக நகர நிர்மாண பணிகளை சீனாவுக்கு கையளிக்கும் முன்னர் அதனை சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றுக்கு கையளிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.
குறித்த நிறுவனமே சிங்கப்பூரின் துறைமுக நிர்மாணத்தை மேற்கொண்ட நிறுவனமாகும். எனினும் குறித்த சிங்கப்பூர் நிறுவனத்திடம் இந்த திட்டம் கையளிக்கப்பட்டால் அது இலங்கைக்கு வாய்ப்பாக இருக்காது என்ற அடிப்படையிலேயே சீன நிறுவனத்துக்கு கைமாறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சிங்கப்பூர் நிறுவனம் இதனை பொறுப்பேற்றிருக்குமானால், சுற்றாடல் விடயத்தில் சிறந்த முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் என்று முன்னாள் அரசாங்கத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
இலங்கைக்கு பல பில்லியன் ரூபா நட்டம்!
இலங்கைக்கான பயண தடையை நீக்கியது ஜப்பான்!
பாதுகாப்பற்ற சிறுவர்களின் விபரங்களை சேகரிக்க புதிய தரவுத்தளம் - சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அறிவிப...
|
|