தாய்லாந்தை சென்ற ஜனாதிபதி – இன்று அந்நாட்டு பிரதமருடன் சந்திப்பு!

பாங்கொங்கில் நடைபெறவுள்ள ஆசிய அபிவிருத்தி கலந்துரையாடல் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தாய்லாந்து சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று கொங்கொங் சுவர்ணபூமி விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.
தாய்லாந்து கலாச்சார அமைச்சர் தலைமையிலான குழுவினர் அவரை விமான நிலையத்தில் வைத்து வரவேற்றதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. ஆசிய வலைய நாடுகளுக்கு பொதுவாக காணப்படும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்படும், ஆசிய அபிவிருத்தி கலந்துரையாடல் 34 நாடுகளின் பங்குபற்றலோடு இன்று ஆரம்பமாகி 10ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதேவேளை எதிர்வரும் 9ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த மாநாட்டில் உரையாற்றவுள்ளதோடு, இன்றுஅவர் தாய்லாந்துப் பிரதமரை சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவுள்ளார்.
Related posts:
லசந்தவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது!
யாழ்ப்பாணத்தில் குருநகர் பகுதி முடக்கம் : வெளியாட்கள் உள்நுளைய தடை - பொலிஸார், இராணுவம் குவிப்பு!
கொரோனா தொற்று இன்னும் முழுமையாக நீங்கவில்லை - உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை!
|
|
தொடர்ந்தும் நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டால் 24 ஆம் திகதி முடக்கப்படும் நாட்டை மீளவும் 27ஆம் திகதி தி...
மலையக தமிழரின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு இந்தியா தொடர்ந்தும் உதவியளிக்கும் - இந்திய வெளிவிவகார அமைச்ச...
தற்போதைய நெருக்கடி திடீரென உருவாகவில்லை - இலங்கையின் நிலைமையை உன்னிப்பாக அவதானிப்பதாக பிரித்தானியா அ...