தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைவதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவிப்பு!

உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது
முன்பமதக உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதற்கமைவாக இந்தத் தர்தலில் தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்று நள்ளிரவு 12 மணி வரை விண்ணப்பிக்க முடியும்.
29 மாநகர சபைகள், 36 நகர சபைகள் உட்பட 275 பிரதேச சபைகளுக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக தேர்தல் நடைபெறவுள்ளது.
வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் நடவடிக்கை கடந்த 21 ஆம் திகதி நண்பகலுடன் நிறைவுக்கு வந்தமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
முன்னாள் இராணுவ வீரர்களின் கோரிக்கை குறித்து அவதானம்!
பொது அமைப்புகளின் ஒற்றுமையிலேயே அந்தந்த பகுதியின் அபிவிருத்தி தங்கியுள்ளது - ஊர்காவற்றுறை பிரதேச சபை...
ஆடை அணிந்து பார்ப்பது முற்றாக தடை செய்யப்பட வேண்டும் - ஆடை விற்பனை நிலையங்களுக்கு சுகாதார அமைச்சு கட...
|
|