தபால் ஊழியர்கள் மற்றும் அம்பியூலன்ஸ் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பு

மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கண்டி, நுவரெலியா மற்றும் காலி கோட்டை தபால் நிலையங்களை சுற்றுலா விடுதிகளாக அபிவிருத்தி செய்வதை உடன் நிறுத்துதல், கொழும்பு கோட்டை ஜனாதிபதி வீதியிலுள்ள மத்திய தபால் பறிமாற்றகத்தில் தபால் நிலையமொன்றை ஸ்தாபித்தல் மற்றும் 2006 ஆம் ஆண்டு சுற்று நிருபத்திற்கு அமைய ஊழியர்களை இணைத்து கொள்ளும் செயற்பாடுகளில் தபால் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்கலை நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தங்களின் கோரிக்கைகளுக்கு இதுவரை எவ்வித உரிய தீர்வும் வழங்கப்படவில்லை என்பதால் பணிப்பகிஷ்கரிப்பு மீள ஆரம்பிக்கப்பட்டதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார குறிப்பிட்டுள்ளார்.
இந்த பணிப்பகிஷ்கரிப்பில் 25,000 மேற்பட்ட தபால் ஊழியர்கள் இணைந்துக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் இந்த பணிப்பகிஷ்கரிப்பில் இணைந்துக் கொள்ளப்போவதில்லை என ஐக்கிய தபால் ஊழியர்கள் சங்கத்தின் தலைமைச் செயலாளர் எச்.ஏ.ஆர்.நிஹால் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தபால் ஊழியர்களின் கோரிக்கை தொடர்பில் அமைச்சரவைக்கு பிரேரணை சமர்பிக்கப்பட்டுள்ளதாக தபால்துறை அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீம் தெரிவித்துள்ளார்.இதன் காரணமாக திட்டமிடப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பை கைவிடுமாறும் தபால் துறை அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Related posts:
|
|