தனிப்பட்ட விஜயமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச இந்தியா பயணம் – நாளை திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி தரிசனத்தில் பங்கேற்பார் எனவும் தெரிவிப்பு!

இரண்டுநாள் பயணமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, இன்று (23) முற்பகல் திருப்பதி விமான நிலையத்தை சென்றடைந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விஜயத்தின் போது திருப்பதி ஏழுமலையான் தரிசனத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஈடுபடவுள்ளார். பிரதமருடன் அவரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஸவும் இந்தியாவிற்கு சென்றுள்ளார்.
நாளை வௌ்ளிக்கிழமை வெங்கடேஸ்வர சுவாமி தரிசனத்தில் பிரதமர் ஈடுபடவுள்ளதுடன், அதற்கான ஏற்பாடுகளை திருமலை, திருப்பதி தேவசம் போர்ட் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பெப்ரவரி மாத மின் பட்டியல் கண்டனமே அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கு அறவிடப்படும் - மின்சக்தி மற்ற...
வெள்ளம் ஏற்படும் அனர்த்த நிலை - தயார் நிலையில் படையினர் என விமானப்படை பேச்சாளர் தெரிவிப்பு!
சகல அரச சேவைகளையும் மாவட்ட மற்றும் பிரதேச ரீதியில் பரவலாக்குவது காலத்தின் அவசியமாகும் - ஜனாதிபதி கோட...
|
|